உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கோழியாளம் கிராமத்தில் இரட்டைமலை சீனிவாசன் 162வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தை கட்சி காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சூ.க.விடுதலைசெழியன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தயாநிதி வரவேற்றார். செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு கலந்து கொண்டு, இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனார். தொடர்ந்து, கொரோனா நிவாரண உதவியாக 50 ஏழை எளிய குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் காய்கறி உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் கலை கதிரவன், மாவட்ட துணை செயலாளர் விஜயகுமார், மாநில துணைச் செயலாளர் உதயகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மதுராந்தகம் அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல், கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், வடக்கு ஒன்றிய செயலாளர் விவேகானந்தன் உட்பட பலர் இருந்தனர்.